உள்ரணம் தீர:
- கொட்டை கரந்தை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம்
உள்ரணம் குணமாக:
- கொத்தமல்லி உணவில் அடிக்கடி பயன்படுத்த வர விரைவில் குணமாகும்
அக உறுப்புகள் சீராக:
- சீரக நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும்
அக உறுப்புகள் பலமடைய:
- கிராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்
உள்ரணம்:
- தென்னம் பூவை மென்று தின்று வரவும்
உள் உறுப்புகளை
வன்ன்மைபடுத்த :
- கொன்றை பூ பொடி செய்து சாப்பிட்டு வர உள்ளுறுப்புகளை வன்ன்மைபடுத்தலாம்
கழுத்து வலி குணமாக:
- அமுக்கிராங் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்று போடலாம்
சன்னி பிடரி வலி, வாத நோய் கட்டுப்பட:
- வேப்பன்னையில் தலைமுழுகி வர குணமாகும்
பொன்னுக்கு வீங்கி குணமாக:
- கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் வசம்பு பலா மஞ்சள் சேர்த்து அரைத்து போடவும்
கண்டமாலை வீக்கம் கரைய:
- கொள்ளுக்காய் வேளை செடி வேர், மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்
நரம் இசிவு சிரங்கு, கண்டமாலை தீர:
- உத்தாமணி இலையை வேப்பென்னையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்
கண்டமாலை புண் தீர:
- மாவிலங்கபட்டை கஷாயம் காலை மாலை கொடுக்கலாம்
தண்டுவடவலி குணமாக:
- வாத நாராயணன் இலை 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும்
முதுகு, தோள்பட்டை, புட்டா வலி:
- வாத நாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்
No comments:
Post a Comment